﻿பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
"இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-"
அதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது-
"அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்."
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
"அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்."
"எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்."
"அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்."
